இஸ்ரேல் – இரான் இடையிலான மோதல் காரணமாக, இந்தியாவிலிருந்து இரானுக்கு நடந்து வந்த தேயிலை ஏற்றுமதியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஏற்கெனவே அனுப்பிய தேயிலைக்குரிய தொகை இன்னும் வந்து சேராத நிலையில், இனிவரும் நாட்களில் இரானை ஒட்டியுள்ள பிற நாடுகளுக்கு தேயிலை அனுப்புவதும் தடைபடுமென்று தேயிலை ஏற்றுமதியாளர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.