ஈரானின் அணுசக்தி திட்டம் "முற்றாக அழிக்கப்பட்டுவிட்டது" என ட்ரம்ப் அறிவித்த போதிலும் அதில் உண்மையில்லை என அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அமெரிக்காவின் தாக்குதலில் ஈரானின் அணு சக்தி நிலையங்களுக்கு ஏற்பட்ட சேதம் குறித்து பென்டகன் உளவுத்துறை மேற்கொண்ட ஆய்வுகளிலேயே இந்த உண்மை தெரியவந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.