சுகாதாரத்துறை மீதான நம்பிக்கைக்கு குந்தகத்தை ஏற்படுத்தும் சம்பவமாக, முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவின் பதவிக் காலத்தில் இடம்பெற்ற மருந்து கொள்வனவு மோசடியைக் குறிப்பிடலாம். மக்களின் உயிரை துச்சமாகக் கருதி பொறுப்புள்ள அமைச்சரும் அதிகாரிகளும் செய்த இந்த கொடூரமான செயற்பாடானது எந்தவகையிலும் மன்னிக்க முடியாததாகும்.