கல்முனை நீதிமன்றில் ஹாதியா சொன்னது என்ன?

Wait 5 sec.

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்­கு­தல்­க­ளுக்கு தலைமை வகித்­த­தாக கூறப்­படும் பிர­தான தற்­கொலை குண்­டு­தாரி சஹ்ரான் ஹஷீமின் மனை­வி­யான பாத்­திமா ஹாதியா தொடர்­பி­லான வழக்கின் உண்மை விளம்பல் விசா­ரணை இறுதிக் கட்­டத்தை எட்­டி­யுள்­ளது. பாத்­திமா ஹாதியா பயங்­க­ர­வாத தடைச் சட்­டத்தின் 8 ஆம் அத்­தி­யா­யத்­துக்கு அமை­வாக கோட்டை நீதி­வா­னுக்கு அளித்­துள்ள வாக்கு மூலத்தின் சுயா­தீனத் தன்­மையை ஒப்­பு­விக்க உண்மை விளம்பல் விசா­ர­ணைகள் தற்­போதும் இடம்­பெற்று வரும் நிலையில், அவ்­வி­சா­ர­ணையில் வழக்குத் தொடுநர் தரப்பின் சாட்­சி­யங்கள் மீதான விசா­ர­ணைகள் நிறைவு பெற்­றுள்­ளன.