சட்டபூர்வமான வலிதாரர்கள் இன்றி நடைபெறுகின்ற திருமணங்கள் செல்லுபடியற்றதாகிவிடும் என காதிநீதிபதிகள் சபை தீர்ப்பளித்துள்ளது. பாணந்துறை காதிநீதிமன்றத்தில் வழங்கப்பட்ட தீர்ப்பொன்றை ஆட்சேபித்து அளிக்கப்பட்ட மேன்முறையீடு குறித்ததான விசாரணைகளையடுத்தே கடந்தவாரம் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.