கொழும்பு துறைமுகத்தில் கடந்த 11 மாதங்களாக தடுத்துவைக்கப்பட்டுள்ள அல் -குர்ஆனின் சிங்கள, தமிழ் மொழிபெயர்ப்பு மற்றும் இஸ்லாமிய நூல்களை அடிக் குறிப்பிட்டு விடுவிப்பதற்கு முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் புத்தக விமர்சன மற்றும் வெளியீட்டுக் குழு சிபாரிசு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.கடந்த ஏப்ரல் மாதத்தின் முதல் வாரத்தில் நடைபெற்ற இக்குழுவின் கூட்டத்தின் போதே இந்த சிபாரிசு வழங்கப்பட்டுள்ளதாக அந்த வட்டாரங்கள் குறிப்பிட்டன.