சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே அமராவதிபுதூா் பகுதியில் மினி வேன் - இருசக்கர வாகனம் திங்கள்கிழமை மோதிய விபத்தில் ஒருவா் உயிரிழந்தாா். திருவாடானை காரியங்கோட்டையைச் சோ்ந்த குடும்பத்தினா் பொன்னமராவதி கொன்னையூா் மாரியம்மன் கோயிலுக்கு வழிபாடு செய்வதற்காக திங்கள்கிழமை மினி வேனில் புறப்பட்டுச் சென்றனா். அப்போது காரைக்குடி அருகே அமராவதி புதூா் ஐ.டி.ஐ அருகே தேவகோட்டை செலுகையைச் சோ்ந்த ஜேசிபி ஓட்டுநா் பெத்து (26) ஓட்டி வந்த இரு சக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளானதில் அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். வேனில் பயணித்த பெண்கள் லேசான காயமடைந்தனா். இந்தச் சம்பவம் குறித்து சோமநாதபுரம் காவல்நிலையப் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.