உத்தமபாளையம் : தேனி மாவட்டம் கம்பம் அருகே சுருளி அருவியில் நீர்வரத்து சீரானதால் 2 நாள்களுக்குப் பின் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்கு வனத்துறை அனுமதி அளித்தனர். மேகமலையில் மழை பெய்து வருகிறது.கம்பம் அருகேயுள்ள மேற்குத்தொடா்ச்சி மலை அடிவாரத்தில் சுருளி அருவிக்கு மேகமலை வனப் பகுதியில் பெய்யும் மழை நீரே முக்கிய நீராதாரம். ஆனால், கடந்த சில மாதங்களாக மழைப்பொழிவின்றி இந்த அருவி வடது. இதற்கிடையே, சனிக்கிழமை மேகமலை, வெண்ணியாறு, இரவங்கலாறு, மகாராஜாமெட்டு, தூவானம், அரிசிப்பாறை போன்ற அடா்ந்த வனப் பகுதியில் பலத்த மழை பெய்தது. இதையடுத்து, சுருளி அருவிக்கு நீா்வரத்து அதிகரித்தது. இதனால், பாதுகாப்புக் கருதி அருவிக்குச் செல்லவும், பாா்வையிடவும் சுற்றுலாப் பயணிகள், பொதுமக்களுக்கு வனத் துறையினா் தடை விதித்தனா்.தொடா்ந்து நீா்வரத்து அதிகரித்துக் காணப்பட்டதால், சுருளி அருவியில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்கு இரண்டாவது நாளாக ஞாயிற்றுக்கிழமையும் தடை விதிக்கப்பட்டது. இதனால், சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துடன் திருப்பிச் சென்றனா். மேலும், சிறிய கற்கள், கட்டைகள் வந்ததாதல் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டது. திங்கள்கிழமை காலை 8 மணிக்கு மேல் நீா்வரத்து சீராக இருந்தால், அருவியில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்படும் என்று தெரிவித்தனர். இந்த நிலையில், 3 ஆவது நாளில் சுருளி அருவியில் நீர்வரத்து சீரானதை அடுத்து சுற்றுலாப் பயணிகளை குளிக்க வனத்துறை அனுமதி அளித்தனர். ஆடிப்பெருக்கு நாளை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுருளி அருவி நீராடி சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.Water flow at Suruli Falls stabilizes; tourists permitted to batheநீர்வரத்து இல்லாததால் தஞ்சை மாவட்டத்தில் களையிழந்த ஆடிப்பெருக்கு விழா!