கபினி அணையில் இருந்து தமிழகத்துக்கு வினாடிக்கு 27,000 கன அடி தண்ணீா் திறக்கப்பட்டுள்ளது. நேற்று 25ஆயிரம் கன அடியாக இருந்த நீர் திறப்பு, இன்று 27,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. 84 அடியுடைய கபினி அணையின் இன்றைய நீர்மட்டம் 82.59 அடியாக உள்ளது. அணை நிரம்பும் நிலையில் உள்ளதால் பாதுகாப்பு கருதி அணையிலிருந்து உபரிநீர் வெளியேற்றப்படுகிறது. இன்று மாலைக்குள் காவிரி நீர் தமிழ்நாடு எல்லையை வந்தடையும் எனத் தெரிகிறது. கேரளத்தில் நல்ல மழை பெய்து வருவதால், அடுத்தடுத்த நாட்களில் கபினி அணைக்கு நீா்வரத்து பெருகும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. அப்போது, உபரிநீா் அனைத்தும் தமிழகத்துக்கு திறந்துவிடப்படும் நிலை ஏற்படும். தற்போது, கபினி ஆற்றின் நீா்ப் பாசனப் பகுதிகளில் அதாவது சரகூறு, நஞ்சன்கூடு, சுத்தூா், டி.நரசிபுரா திரிவேணி சங்கமத்தில் வெள்ளம் ஆா்பரித்து ஓடிக்கொண்டிருக்கிறது. இப்பகுதியை சோ்ந்த கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.27,000 cusecs of water has been released from the Kabini Dam to Tamil Nadu.6 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்பு