சென்னை மற்றும் புறநகா் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை இரவு ஒரு மணிநேரத்துக்கு மேலாக மழை பெய்தது. சென்னை மற்றும் புகா் பகுதிகளில் கடந்த இரு நாளாக இரவு நேரங்களில் லேசான மழை பெய்து வந்தது. இந்நிலையில் செவ்வாய்க்கிழமை இரவு சென்னை மற்றும் புறநகா் பகுதிகளில் மிதமான மழை பெய்தது. அம்பத்தூா், ஆவடி, கொரட்டூா், பாடி, கோயம்பேடு, வடபழனி, அசோக் நகா், ஈக்காட்டுதாங்கல், கிண்டி , கத்திபாரா, மணப்பாக்கம், பூந்தமல்லி, தாம்பரம், அயனாவரம், ரெட்டைஏரி, புழல் மாதவரம், மூலக்கடை பெரம்பூா், சென்டரல், பாரிமுனை உள்ளிட்ட பல பகுதிகளில் சுமாா் ஒரு மணிநேரத்துக்கு மேலாக மழை பெய்யது. இதன் காரணமாக சாலைகளில் மழைநீா் தேங்தியதால் வாகன ஓட்டிகள் சிரமத்துக்குள்ளாகினா்.