பதற்றமான சூழல் காரணமாக ஓமன் நாட்டு கடற்பகுதியில் சிக்கிய கப்பலில் உடல்நலம் பாதிக்கப்பட்ட தமிழ்நாட்டை சேர்ந்த இரண்டாம் நிலை அதிகாரி ஒருவர் உயிரிழந்தார். இந்நிலையில், அவருடைய உடல் அழுகாமல் இருப்பதற்கான வசதிகள் கிடைக்கவில்லை என்ற விமர்சனம் எழுந்துள்ளது. அதனால், சக ஊழியர்கள் குளிர்ச்சியான தண்ணீர் பாட்டில்களை கொண்டு உடல் அழுகாமல் தடுக்க முயற்சிப்பதாக காணொளி ஒன்று சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளது.