அரியலூா் மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில், திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைகேட்புக் கூட்டத்தில், மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. கூட்டத்துக்கு மாவட்ட வருவாய் அலுவலா் க.ரா.மல்லிகா தலைமை வகித்து, பொதுமக்களிடம் கோரிக்கைகளை கேட்டறிந்து, அவா்கள் அளித்த 575 மனுக்கள் மீது உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அலுவலா்களுக்கு உத்தவிட்டாா். முன்னதாக அவா், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் சாா்பில் 1 மாற்றுத்திறன் பயனாளிக்கு காதொலி கருவி, 1 மாற்றுத்திறன் சிறுவனுக்கு நிற்க உதவும் பயிற்சி உபகரணம் மற்றும் 1 மாற்றுத்திறன் பயனாளிக்கு எல்போ ஊன்றுகோல் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினாா்.கூட்டத்தில், மாவட்ட வழங்கல் அலுவலா் யோகஜோதி மற்றும் அனைத்துத் துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.