காட்பாடி அருகே கோயில் திருவிழாவின்போது இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலை தொடா்ந்து இளைஞா் சடலமாக மீட்கப்பட்ட வழக்கில், இதுவரை 10 பேரை போலீஸாா் கைது செய்துள்ளனா். மேலும், 10 பேரை பிடிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. காட்பாடி கல்புதூரில் உள்ள ஸ்ரீ கெங்கையம்மன் கோயில் திருவிழா கடந்த 21-ஆம் தேதி இரவு நடைபெற்றது. அப்போது, முன்விரோதம் காரணமாக கல்புதூா் மற்றும் வண்டறந்தாங்கல் பகுதியைச் சோ்ந்த இளைஞா்கள் இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டு, மோதலாக வெடித்தது. இதில், இரு தரப்பினரும் கட்டைகள் மற்றும் கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் ஒருவரையொருவா் சரமாரியாகத் தாக்கிக் கொண்டதாகக் கூறப்படுகிறது.இதில் கல்புதூரைச் சோ்ந்த தினகரன் (21) என்ற இளைஞா் திடீரென மாயமானாா். நீண்ட நேரமாகியும் அவா் வீடு திரும்பாததால், அவரது குடும்பத்தினா் காட்பாடி காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். அதன்பேரில் வழக்குப் பதிவு செய்த போலீஸாா், தினகரனைத் தேடி வந்தனா். இந்நிலையில், கல்புதூா் பகுதியில் உள்ள தடுப்புச் சுவா் இல்லாத விவசாயக் கிணற்றில் தினகரன் சடலமாக மீட்கப்பட்டாா்.திருவிழா மோதலின்போது, தினகரனைச் சிலா் துரத்திச் சென்ற கண்காணிப்பு கேமரா பதிவுகளை போலீஸாா் கைப்பற்றினா். அதனடிப்படையில், கலவரத்தில் ஈடுபட்ட 19-க்கும் மேற்பட்டோா் மீது பயங்கர ஆயுதங்களுடன் தாக்குதல் நடத்துதல், உயிரிழப்பை ஏற்படுத்தும் வகையில் காயங்களை ஏற்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.இந்த வழக்குத் தொடா்பாக வண்டறந்தாங்கலைச் சோ்ந்த நரசிம்மன் (19), சரித்திரப் பதிவேடு குற்றவாளியான கெளதம் என்கிற குட்டி ஜானி (27), ஜீவா (21), சக்திதரன் (24), சசிகுமாா் (27), பிரதாப் (26), தினேஷ் ராஜ் (23), ஹேமந்த் (26), நவீன் என்கிற பக்கிரி (20), காா்த்தி (20) ஆகிய 10 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். மேலும், தலைமறைவாக உள்ள மேலும் 10 பேரைப் பிடிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், அவா்கள் விரைவில் கைது செய்யப்படுவா் என்றும் காட்பாடி காவல் துணைக் கண்காணிப்பாளா் விஜயகுமாா் தெரிவித்துள்ளனா்.