ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் பயங்கரவாதிகளின் பதுங்குமிடம் ஒன்றை ராணுவம் கண்டறிந்துள்ளது. அங்கிருந்து ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளைப் பறிமுதல் செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.குறிப்பிட்ட உளவுத்துறை தகவலின் அடிப்படையில், கேரன் செக்டார் பகுதியில் ராணுவம் தேடுதல் வேட்டையைத் தொடங்கியதாக அதிகாரிகள் கூறினர்.இந்த நடவடிக்கையின்போது, பாதுகாப்புப் படையினர் பதுங்கு குழி ஒன்றைக் கண்டுபிடித்து அழித்துள்ளனர். அங்கிருந்து 5 ஏகே ரகத் துப்பாக்கிகள்,9 ஏகே மேகசின்கள், ஒரு கைக்குண்டு, வெடிமருந்துகள் மற்றும் போர் தொடர்பான பிற பொருள்களைப் பறிமுதல் செய்துள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.தொடர்ந்து அப்பகுதியில் தேடுதல் வேட்டை நடைபெற்று வருகின்றது.The Army has busted a terrorist hideout and recovered arms and ammunition in Kupwara district of Jammu and Kashmir, officials said on Tuesday.சமூக நீதி விடுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் சீரமைக்க நடவடிக்கை