கண்ணீர் சிந்தியபடி பணி ஆணைகளை வழங்கிய முதல்வர் விஜய்!

Wait 5 sec.

கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி பலியானவர்கள் குடும்பத்துக்கு முதல்வர் ஜோசப் விஜய் கண்ணீர் சிந்தியபடி பணி நியமன ஆணைகளை வழங்கியதாக, பணி ஆணையை பெற்றுக்கொண்டவர்கள் தெரிவித்தனர்.கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்துக்குப் பிறகு முதல்முறையாக கரூருக்குப் பயணம் மேற்கொண்டுள்ள முதல்வர் விஜய், மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பேசினார். அதன்பிறகு, கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி பலியான 41 பேரும் 36 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள். இவர்களில் 32 பேருக்கு அரசுப் பணி ஆணை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது 31 பேருக்குத்தான் அரசுப் பணி வழங்கப்பட்டுள்ளது. அதில், சாந்தி என்ற பயனாளிக்கு, பணியாற்ற முடியாத சூழல் இருப்பதால், அரசுப் பணி வழங்கப்படாமல், அதற்கு பதிலாக ரூ.10 லட்சம் நிவாரணத் தொகை மட்டும் வழங்கப்படுகிறது.மற்ற 31 பேரின் விவரங்களும், அவர்களுக்கு வழங்கப்படும் பணிவிவரங்களும் வெளியாகியுள்ளது. இதில் 17 பெண்களுக்கும் 14 ஆண்களுக்கும் பணி ஆணை வழங்கப்பட்டுள்ளது.