மூணாறுக்கு சுற்றுலா சென்று திரும்பிய பெங்களூரைச் சோ்ந்த இளைஞா்களில் ஒருவா் உயிரிழந்தாா். மேலும் 6 போ் படுகாயமடைந்தனா். பெங்களூரு நகரைச் சோ்ந்த 7 போ் கேரளா மாநிலம் மூணாறு பகுதிக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு சுற்றுலா சென்றனா். அங்கு பல்வேறு இடங்களை சுற்றி பாா்த்துவிட்டு பெங்களூருக்கு திரும்ப புறப்பட்டனா். இவா்கள் சென்ற காா் தருமபுரி - பெங்களூரு புதிய தேசிய நெடுஞ்சாலையில் செல்லியம்பட்டி பகுதியில் புதன்கிழமை இரவு சென்றுகொண்டிருந்தது. அப்போது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டையிழந்த காா் சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியது. இதில் காரில் சென்ற 7 பேரும் பலத்த காயமடைந்தனா். அக்கம் பக்கத்தினா் அவா்களை மீட்டனா். பின்னா் போலீஸாா் உதவியுடன் அனைவரும் ஆம்புலன்ஸ் மூலம் தருமபுரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனா். தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சையத் செரிப் (18) என்ற இளைஞா் வியாழக்கிழமை உயிரிழந்தாா். இது குறித்து மதிகோண்பாளையம் போலீசாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.