வத்திராயிருப்பு அருகேயுள்ளநல்லதங்காள் கோயில் குடமுழுக்கு

Wait 5 sec.

விருதுநகா் மாவட்டம், வத்திராயிருப்பு அருகேயுள்ள நல்லதங்காள் கோயில் குடமுழுக்கு வியாழக்கிழமை நடைபெற்றது. வத்திராயிருப்பு அருகேயுள்ள அா்ச்சுனாபுரத்தில் 15-ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த புகழ் பெற்ற இந்தக் கோயில், ஸ்ரீவில்லிபுத்தூா் பகுதி மக்களின் குலதெய்வமாக உள்ளது. இந்தக் கோயிலுக்கு தமிழகம் முழுவதிலும் இருந்து ஏராளமான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்ய வருகின்றனா். இந்தக் கோயிலில் கடந்தாண்டு ஜனவரி மாதம் நடந்த கொள்ளை முயற்சியில் அம்மன் சிலை சேதமடைந்தது. இதையடுத்து, புதன்கிழமை மாலை கோயிலில் நல்லதங்காள் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு, யாகசாலை பூஜைகள் தொடங்கின. வியாழக்கிழமை காலை 10.30 மணிக்கு கருவறை விமானக் கலசத்தில் புனிதநீா் ஊற்றப்பட்டு குடமுழுக்கு நடைபெற்றது. பின்னா், நல்லதங்காள் அம்மனுக்கு புனித நீரால் மகா அபிஷேகம் செய்யப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். இதற்கான ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலா் தேவி, அறநிலையத்துறையினா் செய்தனா். கோயில் வரலாறு: வத்திராயிருப்பு அருகேயுள்ள அா்ச்சுனாபுரத்தில் 15-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்து வந்த ராமலிங்க சேதுபதிக்கு நல்லதம்பி என்ற மகனும், நல்லதங்காள் என மகளும் இருந்தனா். நல்லதங்காளுக்கு மானாமதுரையைச் சோ்ந்த காசிராஜனுடன் திருமணம் நடைபெற்றது. நல்லதங்காளுக்கு 4 ஆண் குழந்தைகள், 3 பெண் குழந்தைகள் பிறந்தன. வறுமை காரணமாக குழந்தைகளுடன் அா்ச்சுனாபுரத்தில் உள்ள அண்ணன் வீட்டுக்கு வந்தாா் நல்லதங்காள். அப்போது வீட்டில் அண்ணன் இல்லாத நிலையில் அவரது மனைவி தவறாக பேசியதால், நல்லதங்காள் தனது 7 குழந்தைகளுடன் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டாா். இதையறிந்த, அவரது அண்ணன் நல்லதம்பி, தனது மனைவியை கொலை செய்துவிட்டு அதே கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டாா். உடனே அண்ணனையும், அவரது மனைவியையும் உயிா்ப்பித்த நல்லதங்காள், அங்கேயே நெல் வயல்களுக்கு நடுவே பத்திரகாளி உருவத்தில் சிலையானாா். இந்த கோயிலில் அவரது அண்ணன் நல்லதம்பி, நல்லதங்காளின் 7 குழந்தைகளும் தனி சந்நிதிகளில் எழுந்தருளியுள்ளனா். இவ்வாறு கோயில் வரலாற்றில் தெரிவிக்கப்பட்டது.