துருக்கியில் சிசேரியன் பிரசவங்கள் மேற்கொண்டதற்காக 100-க்கும் மேற்பட்ட மகப்பேறு மருத்துவர்கள் மீது அந்நாட்டு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. சம்மந்தப்பட்ட மருத்துவர்களுக்கு அபராதம் விதித்ததோடு அவர்களை இடைநீக்கம் செய்து கட்டாயப் பயிற்சி பெறவும் உத்தரவிட்டுள்ளது. 2023ஆம் ஆண்டின் கடைசியாகக் கிடைத்த தரவுகளின்படி, பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டிற்கான அமைப்பின் 38 நாடுகளிலேயே துருக்கியில்தான் சிசேரியன் பிரசவங்களின் விகிதம் மிக அதிகமாக உள்ளது. அந்த ஆண்டில் அங்கு நடந்த ஒவ்வொரு 1,000 நேரடி பிரசவங்களிலும் சுமார் 615 பிரசவங்கள் சிசேரியன் முறையில் செய்யப்பட்டுள்ளன. பெண்கள் இயற்கை முறையில் பிரசவிப்பதை வலியுறுத்தி வரும் துருக்கி அதிபர் எர்டோகன், அந்நாட்டில் அதிகரித்து வரும் விருப்பத் தேர்விலான சிசேரியன் பிரசவங்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த விரும்புகிறார். இதன் ஒரு பகுதியாக, தகுந்த மருத்துவக் காரணம் இன்றி தனியார் மருத்துவமனைகளில் விருப்பத்தின் பேரில் சிசேரியன் பிரசவம் செய்வதற்கு அந்நாட்டு அரசு ஏப்ரல் 2025ஆம் ஆண்டு முதல் தடை விதித்து உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது. வியத்நாம் படகு விபத்து: உயிரிழந்த 15 இந்தியர்கள் உடல்கள் எப்போது தாயகம் கொண்டு வரப்படும்?