இசையமைப்பாளர் இளையராஜா மறைந்த பாடகி எஸ். ஜானகிக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். இந்தியத் திரையிசையில் 48 ஆயிரத்திற்கும் அதிகமான பாடல்களைப் பாடி ரசிகர்களிடம் நீங்காத இடத்தைப் பிடித்த எஸ். ஜானகி (88) வயது மூப்பு காரணமாக உயிரிழந்தது அவரது ரசிகர்களிடம் மிகுந்த வேதனையை ஏற்படுத்தியுள்ளது. தமிழில் ஆயிரக்கணக்கான மிகச்சிறந்த பாடல்களைப் பாடிய குரல் என்பதால் பலரும் ஜானகியின் பாடலைப் பகிர்ந்து இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், இசையமைப்பாளர் இளையராஜா விடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.pic.twitter.com/HHG6pRVU3G— Ilaiyaraaja (@ilaiyaraaja) July 12, 2026 அதில், “ஜானகியம்மா காலமான செய்தி கேட்டு மிகவும் துக்கமடைந்தேன், அதிர்ச்சியாக இருந்தது. தன் சொந்த வாழ்வில் தாங்க முடியாத துயரங்களைத் தாங்கி வாழ்ந்து வந்தவர் ஜானகியம்மா. உலக மேதைகள் பலரின் வாழ்வும் துக்கமாகவே இருந்திருக்கிறது. திறமையில், தான் யாருக்கும் சளைத்தவர் இல்லை என நிரூபித்தவர். நான் எப்படி கடினமான உழைப்பாளியோ அதைவிட மேலான உழைப்பாளி ஜானகியம்மா. அவரது மறைவு இந்திய சங்கீத உலகிற்குப் பெரிய இழப்பு. ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்” எனத் தெரிவித்துள்ளார். பாடகி எஸ். ஜானகி கடைசியாக பாடிய பாடல் என்ன தெரியுமா?Music composer Ilaiyaraaja has expressed his condolences over the passing of singer S. Janaki.