கலவையான போக்கில் இந்திய பங்குச் சந்தை: சென்செக்ஸ் சரிவு; நிஃப்டி உயர்வு!!

Wait 5 sec.

மும்பை: கச்சா எண்ணெய் விலை சரிவு ஒருபுறம் சாதகமாக அமைந்தாலும், ஐடி மற்றும் டாடா குழுமப் பங்குகளின் பலவீனம் காரணமாக இன்றைய வர்த்தகத்தில், முக்கிய பங்குச் சந்தை குறியீடுகளான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி கலவையான போக்கில் வர்த்தகத்தை நிறைவு செய்தன.இன்றைய வர்த்தகத்தில், சென்செக்ஸ் 413.85 புள்ளிகள் உயர்ந்து 74,728.44 புள்ளிகளை எட்டிய நிலையில், வர்த்தகத்தின் இடையே 413.85 புள்ளிகள் உயர்ந்து 74,728.44 புள்ளிகளை எட்டியது. வர்த்தக முடிவில் ஏற்பட்ட சரிவால், 30 பங்குகளைக் கொண்ட சென்செக்ஸ் 19.63 புள்ளிகள் சரிந்து 74,294.96 புள்ளிகளாகவும், 50 பங்குகளைக் கொண்ட நிஃப்டி 75.80 புள்ளிகள் உயர்ந்து 23,346.40 புள்ளிகளாக நிலைபெற்றது.டாடா குழுமத்தின் பெரும்பாலான பங்குகளின் விலை சரிவுடன் நிறைவடைந்த நிலையில், சென்செக்ஸில் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் 4.33 சதவீதமும், டைட்டன் 2.11 சதவீதமும், ஏசியன் பெயின்ட்ஸ் 2 சதவீதமும், மாருதி 1.98 சதவீதமும், டெக் மஹிந்திரா 1.82 சதவீதமும், டாடா ஸ்டீல் 1.73 சதவீதமும் சரிந்தன. மறுபுறம் அதானி போர்ட்ஸ், பவர் கிரிட், ஹெச்டிஎஃப்சி வங்கி மற்றும் பார்தி ஏர்டெல் உள்ளிட்ட பங்குகள் உயர்ந்தன. பணவீக்கம், ரூபாய் மதிப்பு மற்றும் இந்தியாவின் இறக்குமதிச் செலவு குறித்த அச்சத்தின் நடுவில், பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை பீப்பாய் ஒன்றுக்கு சுமார் 103.3 டாலராகக் குறைந்தது ஓரளவு நிம்மதியை அளித்தாலும், ஆசியச் சந்தையின் ஏற்பட்ட சாதகமான சூழலால் தேர்ந்தெடுக்கப்பட்ட பங்குகளில் முதலீடுகள் மேற்கொள்ளப்பட்டதால், இந்தியப் பங்குச் சந்தைகள் கலவையான போக்கில் நிறைவடைந்தன.இருப்பினும், ஐடி மற்றும் டாடா குழுமப் பங்குகளின் பலவீனம் மற்றும் ஐபிஓ நிதித் திரட்டல் திசைதிருப்பப்பட்டதால், பங்குச் சந்தையின் ஒட்டுமொத்த மீட்சியை மட்டுப்படுத்தியது. தேசிய பங்குச் சந்தை ரூ. 22,569 கோடி மதிப்பிலான பொதுப் பங்கு வெளியீட்டில், கிடைத்த உற்சாகமான வரவேற்பால், இரண்டாம் நாளிலேயே தனது சந்தாவை முழுவதுமாக பெற்றதாக தெரிவித்தது.ஐரோப்பியச் சந்தைகள் சரிவுடன் வர்த்தகமானது. அமெரிக்கச் சந்தைகள் நேற்று (வியாழக்கிழமை) உயர்ந்து நிறைவடைந்தன.ஆசியச் சந்தைகளைப் பொறுத்தவரை, தென் கொரியாவின் கோஸ்பி, ஜப்பானின் நிக்கி 225, ஷாங்காயின் எஸ்எஸ்இ காம்போசிட் குறியீடு மற்றும் ஹாங்காங்கின் ஹேங் செங் குறியீடு ஆகியவை உயர்ந்தன.தரவுகளின் அடிப்படையில், அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் வியாழக்கிழமையன்று ரூ. 3,208.76 கோடி மதிப்பிலான பங்குகளை விற்பனை செய்தனர்.சர்வதேச 'பிரெண்ட்' கச்சா எண்ணெய் விலை 1.35 சதவீதம் சரிந்து, பீப்பாய் ஒன்றுக்கு 103.4 அமெரிக்க டாலாராக உள்ளது.Benchmark equity indices Sensex and Nifty ended mixed on Friday.டாடா சன்ஸ் தலைவராக என்.சந்திரசேகரன் மறுநியமனம்: ‘சட்டவிரோதம்’ என டாடா அறக்கட்டளைகள் போா்க்கொடி