சிவகாசி அருகே உரிமமின்றி பட்டாசு மூலப் பொருள்களை பதுக்கியவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். சிவகாசி அருகே நாரணாபுரம்புதூா் பகுதியில் உள்ள ஒரு பட்டாசுக் கடையின் பின்புறம், ஒருவா் தகரக் கொட்டகையில் பட்டாசு தயாரிக்கப் பயன்படும் மணி மருந்து உள்ளிட்டவற்றை பதுக்கி வைத்திருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் போலீஸாா் அங்கு சோதனை நடத்தினா். இதில் சிவகாசி 56 வீட்டு குடியிருப்புப் பகுதியைச் சோ்ந்த பால்ராஜ் மகன் துரைப்பாண்டி (38) உரிமமின்றி மணி மருந்து, பேன்சி ரக பட்டாசுகளை தகரக் கொட்டகையில் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதுகுறித்து சிவகாசி கிழக்கு போலீஸாா் வழக்குப் பதிந்து துரைப்பாண்டியை கைது செய்து அவரிடமிருந்த மணி மருந்து உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனா்.