அரசு முறைப்பயணமாக லண்டன் சென்றிருந்த முதல்வர் விஜய், நடிகர் மற்றும் ரேஸர் அஜித்குமார் அணி பங்கேற்ற கார் பந்தயத்தைத் தொடக்கி வைத்தார். தமிழ்த்திரையில் துருவங்களாக இருந்த இவர்களின் சந்திப்பு குறித்து சமூக வலைதளங்களில் ஆதரவாகவும், எதிர்ப்பாகவும் பதிவுகள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றன.பத்திரிகையாளர் விகே சுந்தர்இது குறித்து தினமணி வலையொளிக்கு பத்திரிகையாளர் வி.கே. சுந்தர் பேட்டியளித்துள்ளார். அதில், அஜித் அழைப்பின்பேரில் விஜய் அந்தநிகழ்ச்சியில் பங்கேற்றதாகவும், விளையாட்டிற்காக விஜய் எடுக்கும் முன்னெடுப்புகளுக்கு உறுதுணையாக இருக்க அஜித் முடிவெடுத்துள்ளதாகவும் தெரிவித்தார்.இருவரும் இணைந்து கொடுத்துள்ள போஸ், நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் தவெகவினர் போஸ்டர்களாக பயன்படுத்தும் வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்தார்,மேலும் விஜய் கேட்டுக்கொண்டதற்கிணங்க தனது புதிய படத்தின் படப்பிடிப்பை சென்னையில் நடத்த அஜித் முடிவெடுத்துள்ள விபரம், அஜித் ஆவணப்பட வெளியீட்டுத் தேதி உள்ளிட்ட பல்வேறு தகவல்களை இந்த நேர்காணலில் பத்திரிகையாளர் விகே சுந்தர் பகிர்ந்துள்ளார்.வீடியோவை முழுமையாக காண்பற்கான இணைப்பு:https://www.youtube.com/watch?v=nfmRdgKd9fQ