விநாயகர் சிலையைக் கரைக்கச் சென்ற 6 மாணவர்கள் நீரில் மூழ்கி பலியான சோகம்!

Wait 5 sec.

தெலங்கானா மாநிலத்தில் விநாயகர் சிலையைக் கரைப்பதற்காக குளத்தில் இறங்கிய 6 மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. தெலங்கானா மாநிலம் சங்காரெட்டி மாவட்டம் படஞ்சேரு மண்டலம் பெட்டகஞ்சர்லா என்ற கிராமத்தில் உள்ள தனியார் அறக்கட்டளையைச் சேர்ந்த மாணவர்கள், தங்களது ஆதரவற்றோர் இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலையைக் கரைக்கச் சென்றுள்ளனர். அப்போது குளத்தில் இறங்கியபோது 6 மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். சமீபத்தில் அந்த குளத்தில் மண் தோண்டி எடுக்கப்பட்டதால் அதிக குழியுடன் இருந்ததாகக் கூறப்படுகிறது, இதுதெரியாத மாணவர்கள் அதில் இறங்கியதால் நீரில் மூழ்கி இறந்தனர். காவல்துறையினர் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். Six teenagers drown during Ganesh idol immersion in Sangareddy