டோரதி என்ன மாதிரியான கதை? கார்த்திக் சுப்புராஜ் விளக்கம்!

Wait 5 sec.

டோரதி திரைப்படம் குறித்த கேள்விக்கு இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் பதிலளித்துள்ளார். இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய டோரதி திரைப்படம் மதுரையைப் பின்னணியாகக் கொண்டு உருவாகியுள்ளது. 1980-களில் நடக்கும் கதையாக உருவான இதில் நட்பு, காதலுடன் அழுத்தமான படமாக உருவாகியுள்ளதாகக் கூறப்படுகிறது.இந்தப் படத்தில் ரிஷிகாந்த், சனத், கீர்த்தி சுரேஷ் ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க, இசையமைப்பாளர் இளையராஜா இசையமைத்துள்ளார்.இப்படத்தில் இடம்பெற்ற கல்யாண விருந்து, முத்துமணி ஆகிய பாடல்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன. இப்பாடல்களால் இன்றைய இளைஞர்களும் இசையும் வரியும் சுத்தமாக இருக்கிறது என இளையராஜாவைப் பாராட்டி வருகின்றனர்.மேலும், அண்மையில் டோரதி திரைப்படம் டொரண்டோ திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு பார்வையாளர்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்றது. இந்த நிலையில், டோரதி எப்படிப்பட்ட திரைப்படம் எனக் கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு கார்த்திக் சுப்புராஜ், “எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல்தான் ஒரு திரைப்படத்தை நான் பார்க்கிறேன். அதுதான் சரியாக இருக்கும் என்றும் நினைப்பதால் டோரதி குறித்து சொல்வதை தவிர்க்கிறேன். டீசரில் டிரைலரில் என்ன சொல்லப்படுகிறதோ அந்த அளவிற்கான தகவலே போதும். டோரதி டிரைலர் விரைவில் வெளியாகவுள்ளது” எனக் கூறியுள்ளார். Director Karthik Subbaraj has responded to a question regarding the movie Dorothy.