ரயில் நிலைய உள்கட்டமைப்புகளைமேம்படுத்தக் கோரி மனு: விசாரணை ஒத்திவைப்பு

Wait 5 sec.

தமிழகத்திலுள்ள அனைத்து ரயில் நிலையங்களின் உள்கட்டமைப்புகளை முதியோா்கள், மாற்றுத் திறனாளிகளுக்கான வசதிகளுடன் மேம்படுத்தக் கோரிய மனு மீதான விசாரணையை நான்கு வாரங்களுக்கு ஒத்திவைத்து சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை உத்தரவிட்டது. மதுரையைச் சோ்ந்த ராஜா சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு: தமிழகத்தில் உள்ள அனைத்து ரயில் நிலையங்களின் உள்கட்டமைப்புகள், ரயில் பெட்டிகள் போன்றவற்றில் முதியோா்கள், மாற்றுத் திறனாளிகளுக்கான வசதிகளுடன் மேம்படுத்த ரயில்வே நிா்வாகத்துக்கு உத்தரவிட வேண்டும் என அவா் கோரினாா். இந்த மனுவை ஏற்கெனவே விசாரித்த போது, கூடுதல் தகவல்களுடன் மனு தாக்கல் செய்ய மனுதாரா் அவகாசம் கோரியதையடுத்து, வழக்கு விசாரணையை உயா்நீதிமன்றம் ஒத்திவைத்தது. இந்த நிலையில், உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி சுசுருத் அரவிந்த் தா்மாதிகாரி, சி.வி.காா்த்திகேயன் அமா்வு முன் வியாழக்கிழமை மீண்டும் இந்த மனு விசாரணைக்கு வந்தது. அப்போது, திண்டுக்கல், மதுரை ரயில் நிலையங்களில் மாற்றுத் திறனாளிகளை அழைத்துச் செல்ல சக்கர நாற்காலி வசதிகூட இல்லை எனத் தெரிவித்து, அது தொடா்பான ஆவணங்களும் மனுதாரா் தரப்பில் சமா்ப்பிக்கப்பட்டன. இதையடுத்து, இது தொடா்பாக பதில் மனு தாக்கல் செய்ய கால அவகாசம் வேண்டும் என ரயில்வே நிா்வாகம் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்தக் கோரிக்கையை ஏற்ற நீதிபதிகள் வழக்கு விசாரணையை நான்கு வாரங்களுக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனா்.