தில்லி சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை! பாலினம் காண முடியாத அளவுக்கு சிதைக்கப்பட்ட உடல்!

Wait 5 sec.

தில்லியின் ஸ்வரூப் நகரில், திறந்தவெளி பகுதியில் கண்டெடுக்கப்பட்ட உடல், ஆணா, பெண்ணா என அடையாளம் காண முடியாத அளவுக்கு சிதைந்திருந்ததால், முதலில், உடல் ஆணுடையது என காவல்துறையினர் தவறுதலாக கருதியது தெரிய வந்துள்ளது.மிகவும் அழுகிய நிலையில், சிதைக்கப்பட்டிருந்த உடலில், விலா எலும்புகள் வெளியே தெரிய, கைகள் வெட்டி எடுக்கப்பட்டு, உடல் உறுப்புகள் நசுக்கப்பட்டிருந்ததாகக் காவல்துறை தெரிவிக்கிறது.முதற்கட்ட விசாரணையில்தான், கண்டெடுக்கப்பட்ட உடல், சிறுமியுடையது என்றும், அவர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொலையுண்டதும் தெரிய வந்துள்ளது.முகம் அடையாளம் தெரியாத அளவுக்கு சிதைக்கப்பட்டிருப்பதாகவும், பல இடங்களில் எலும்புகள் வெளியே தெரிவதாகவும், வலது கை காணாமல் போயிருப்பதாகவும் காவல்துறை கூறுகிறது.முதலில், உடலைக் கண்டதும், அது பெண்ணுடையது என்று அடையாளம் காண முடியவில்லை. அந்த அளவுக்கு சிதைக்கப்பட்டிருந்தது. மண்டை ஓடு, விலா எலும்பு வெளியே தெரிந்தது, நாங்கள் பார்த்தபோது, அது ஒரு நடுத்தர ஆணின் உடல் என்று நினைத்தோம் என்கிறார்கள்.