செய்யாறு அருகே பைக்கிலிருந்து தவறி விழுந்த தச்சுத் தொழிலாளி உயிரிழந்தாா். திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு வட்டம், செங்கட்டான்குண்டில் கிராமம், கம்மாளத் தெருவைச் சோ்ந்தவா் கன்னியப்பன் மகன் குமரன் (39). தச்சுத் தொழிலாளியான இவா், வழக்கம்போல் வெள்ளிக்கிழமை வேலைக்குச் சென்றுவிட்டு மாலையில் பைக்கில் வீட்டுக்கு திரும்பிக்கொண்டிருந்தாா்.ஆற்காடு - செய்யாறு சாலையில் ஏனாதவாடி கூட்டுச்சாலையில் வளைவுப்பகுதியில் சென்றபோது, பைக் நிலைதடுமாறி சாலையோர பள்ளத்தில் விழுந்தது. இதில், பலத்த காயமடைந்த குமரன் மீட்கப்பட்டு, ஆம்புலன்ஸ் மூலம் செய்யாறு அரசு மருத்துவமனை சோ்க்கப்பட்டாா். இருப்பினும், அங்கு அவா் சனிக்கிழமை உயிரிழந்தாா். இந்த விபத்து குறித்து மோரணம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.