கடைசி டி20: இங்கிலாந்து பந்துவீச்சு; தொடரை முழுமையாகக் கைப்பற்றுமா?

Wait 5 sec.

இலங்கைக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.இங்கிலாந்து - இலங்கை இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி மான்செஸ்டரில் இன்று (செப்டம்பர் 19) நடைபெறுகிறது.இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் ஹாரி ப்ரூக் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளார். இதனையடுத்து, இலங்கை அணி முதலில் பேட் செய்கிறது. இங்கிலாந்து அணி அதன் பிளேயிங் லெவனில் மாற்றமின்றி களமிறங்குகிறது. இலங்கை அணியின் பிளேயிங் லெவனில் ஒரு மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. சமீராவுக்குப் பதிலாக நுவான் துஷாரா சேர்க்கப்பட்டுள்ளார்.முதல் இரண்டு போட்டிகளில் இலங்கையை வீழ்த்தி இங்கிலாந்து அணி ஏற்கனவே தொடரைக் கைப்பற்றிவிட்ட நிலையில், மூன்றாவது போட்டியிலும் வெற்றி பெற்று தொடரை முழுமையாகக் கைப்பற்றும் முனைப்பில் இங்கிலாந்து அணி களமிறங்குகிறது.England won the toss and elected to bowl in the third T20 match against Sri Lanka.சஞ்சு சாம்சனை நீக்கியதுதான் நான் எடுத்ததிலேயே கடினமான முடிவு: கௌதம் கம்பீர்