இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) அடுத்த 20 ஆண்டுகளில் ரூ. 300 லட்சம் கோடியாக உயரும் என்று தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் தெரிவித்தார்.ஐஐடி ரூர்க்கி பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் இன்று கலந்துகொண்டார். அங்கு மாணவர்களுடன் பேசிய அவர், “மாணவர்கள் ஒரு மாற்றத்தை உருவாக்கும் காலகட்டத்தில் வாழ்ந்து வருவது அவர்களின் அதிர்ஷ்டம். அவர்களுடைய எதிர்காலம் மிகவும் நம்பிக்கைக்குரியதாக உள்ளது.மாணவர்கள் அனைவரும் வாழ்வில் துணிச்சலுடன் இருக்கவேண்டும். ஸ்ரீ ராமரின் துணிச்சலான குணம் காரணமாகவே, அரக்கர்களை அழிக்க முனிவர் விஸ்வாமித்திரர் அவரைத் தேர்ந்தெடுத்தார்” என்று தெரிவித்தார்.மேலும், “இந்தியாவில் மிகப்பெரிய மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. நமது நாடு ஒரு மகத்தான எதிர்காலத்தை நோக்கிச் செல்கிறது.வருகிற 2047 ஆம் ஆண்டு வரையிலான காலத்தை நமது பிரதமர் அமிர்த காலம் என்று அழைத்துள்ளார். இது உண்மையில் ஒரு அற்புதமான ‘அமிர்த காலமாக’ இருக்கும்.இந்தியாவின் தற்போதைய மொத்த உள்நாட்டு உற்பத்தி 4.015 டிரில்லியன் அமெரிக்க டாலராக (ரூ. 33.50 லட்சம் கோடி) உள்ளது. இது அடுத்த 20 ஆண்டுகளில் 38 டிரில்லியன் அமெரிக்க டாலராக (ரூ. 300 லட்சம் கோடி) உயரும்” என்று குறிப்பிட்டார்.அஜித் தோவல் சிக்கிமில் பணியாற்றிய தனது ஆரம்பகால பணி அனுபவம் பற்றிப் பேசுகையில் அவருக்கு நேபாளத்தின் ஷெர்பா இனத்தைச் சேர்ந்த ஒருவர் வழங்கிய அறிவுரை பற்றிக் கூறினார்.அதில், “அவர் எனக்கு வாழ்வில் வெற்றி பெற 3 மந்திரங்களை கற்றுத் தந்தார். முதல் மந்திரம், நாம் வரைபடத்தில் எங்கே இருக்கிறோம் என்று அறிவது. இரண்டாவது மந்திரம், நாம் எங்கு செல்லவேண்டும் என்பதை அறிவது. மூன்றாவது மந்திரம், அங்கு சென்று திரும்புவதற்கான வழியை அறிவது” என்று தெரிவித்தார்.National Security Advisor Ajit Doval stated that India's Gross Domestic Product (GDP) would rise to Rs 300 lakh crore over the next 20 years.அடுத்த 6 மாதங்களில் ஒரு லட்சம் இளைஞர்களுக்கு அரசு வேலை! யோகி ஆதித்யநாத்