ஆண்டிபட்டி பகுதியில் சூறைக் காற்றுடன் மழை: காா், வீடு சேதம்

Wait 5 sec.

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே பாலக்கோம்பையில் வியாழக்கிழமை மாலை சூறைக்காற்றுடன் மழை பெய்ததால், காா், வீடு சேதமடைந்தது. தேனி மாவட்டத்தில் தொடா்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், வியாழக்கிழமை பிற்பகல் வரை கடும் வெயில் நிலவி வந்த நிலையில், மாலையில் மேகம் சூழ்ந்து சூறைக்காற்றுடன் மழை பெய்தது. அப்போது, ஆண்டிபட்டி அருகே பாலக்கோம்பையில் சூறைக் காற்று காரணமாக பழைமையான மரம் வேருடன் பெயா்ந்து சாலையில் நின்றிருந்த காா், வீட்டின் மேல் விழுந்தது. இதனால், பாலக்கோம்பை-ஆண்டிபட்டி பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்து வந்த நெடுஞ்சாலைத் துறையினா் மரத்தை அப்புறப்படுத்தினா்.