பாகிஸ்தானில் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து 40 பேர் பலி!

Wait 5 sec.

பாகிஸ்தானில் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 40 பயணிகள் பலியாகியுள்ளனர்.பலூசிஸ்தான் மற்றும் கைபர் பக்துன்குவா மாகாணங்களின் எல்லையில் அமைந்துள்ள செஹ்ரானி - ஸோப் நெடுஞ்சாலையில் 48 பயணிகளுடன் பேருந்து ஒன்று குவேட்டாவில் இருந்து பெஷாவர் நோக்கி இன்று (ஜூலை 3) காலை சென்றுக்கொண்டிருந்தது. இதனைத் தொடர்ந்து, தனாசார் பகுதியின் அருகில் வந்தபோது திடீரென அந்தப் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து அங்குள்ள பள்ளத்தில் கவிழ்ந்ததாகக் கூறப்படுகிறது. இந்தச் சம்பவத்தில், அந்தப் பேருந்தில் பயணித்த 40 பேர் சம்பவயிடத்திலேயே பலியாகினர். இந்த நிலையில், தகவலறிந்து அங்கு விரைந்த காவல் துறையினர் மற்றும் மீட்புப் படையினர் படுகாயமடைந்த 8 பேரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், பலியான 40 பேரின் உடல்களும் மீட்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்துக்கான காரணம் இதுவரை தெரியவராத நிலையில், பாகிஸ்தான் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முன்னதாக, கைபர் மாகாணத்தின் சயீதாபாத் பகுதியில் கடந்த மே மாதம் நின்றுக்கொண்டிருந்த வாகனம் மீது பயணிகள் பேருந்து மோதியதில் 16 பயணிகள் பலியானது குறிப்பிடத்தக்கது.கமேனியின் இறுதிச் சடங்குத் தொடங்கியது! லட்சக்கணக்கான மக்கள் அஞ்சலி! Forty passengers have died after a bus plunged into a ravine in Pakistan.