வெனிசுவேலா நிலநடுக்கத்தில் 2,300 பேர் பலி! 7 நாள்களுக்கு துக்கம் அனுசரிப்பு

Wait 5 sec.

வெனிசுவேலா நாட்டில் ஜூன் 24 ஆம் தேதியில் அடுத்தடுத்து ஏற்பட்ட 7.2 மற்றும் 7.5 ரிக்டர் அளவுகளிலான நிலநடுக்கங்களால் ஆயிரக்கணக்கான கட்டடங்கள் இடிந்து தரைமட்டமாகின.இந்தப் பேரிடரால், வெனிசுவேலா நாட்டில் இதுவரை 2,295 பேர் பலியானதாகவும், 11,000-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 50,000 -க்கும் மேற்பட்டோர் மாயமானதாகவும், அவர்கள் குறித்த எந்தத் தகவலும் இல்லை என அரசின் அதிகாரபூர்வ அறிவிப்பும் வெளியாகியுள்ளது.ஏற்கெனவே பொருளாதார நெருக்கடியால் வெனிசுவேலா நிலைகுலைந்துள்ளது. இந்த நிலையில், வெறும் 39 விநாடிகளில் ஏற்பட்ட இரு சக்திவாய்ந்த நிலநடுக்கங்களால் அந்நாட்டுக்கு நேரடிப் பொருளாதார இழப்பு மட்டும் 10 பில்லியன் அமெரிக்க டாலர்களை (சுமார் ரூ. 95,000 கோடி) தாண்டும் என கணிக்கப்பட்டுள்ளது.இதனிடையே, நிலநடுக்கங்களால் உயிரிழந்த மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்காக வெனிசுவேலாவில் புதன்கிழமை (ஜூலை 1) மாலை 6 மணி தொடங்கி, 7 நாள்கள் துக்கம் அனுசரிக்கப்படுகிறது.தாய்லாந்தில் 11 வயது சிறுவன் ஓட்டிய வாகனம் மோதி 9 துறவிகள் உயிரிழப்புVenezuela quakes death toll rises to 2,295; 7-day national mourning declared