இன்றைய சட்டப்பேரவையில் விவாதம் இருக்காது என பேரவைத் தலைவர் ஜேசிடி பிரபாகர் தெரிவித்துள்ளார்.தமிழக அரசின் பல்வேறு துறைகளில் மானியக் கோரிக்கை மீதான விவாதங்கள், 18 நாள்களாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. செப். 3-ல் முதல்வர் விஜய்யின் பொறுப்பில் உள்ள காவல், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற்ற நிலையில், அதற்கான பதிலுரையை இன்று (செப். 7) வழங்கவுள்ளதாக முதல்வர் விஜய் தெரிவித்தார்.இன்றைய சட்டப்பேரவை காலை 9.30 மணிக்கு கூடியதும் 2026-ஆம் ஆண்டு தமிழ்நாடு சம்பளங்கள் சட்டத் திருத்த மசோதாவை முதல்வா் விஜய் அறிமுகம் செய்யவுள்ளாா்.தொடா்ந்து, 2026 தமிழ்நாடு ஊராட்சிகள் 2-ஆம் திருத்த மசோதாவை, ஊரக வளா்ச்சித் துறை அமைச்சா் ஆனந்த், 2026 தமிழ்நாடு மதிப்புக்கூட்டு வரி திருத்த மசோதாவை, வணிகவரித் துறை அமைச்சா் த.லோகேஷ் தமிழ்ச்செல்வன் ஆகியோா் அறிமுகம் செய்யவுள்ளனா்.இதனிடையே, முதல்வர் விஜய்யின் பதிலுரையும் இன்று நடைபெறவிருப்பதால், இன்றைய சட்டப்பேரவைத் தொடர் மீது பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.இந்த நிலையில், காவல், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை மீதான மானியக் கோரிக்கை குறித்த முதல்வர் விஜய்யின் பதிலுரைக்குப் பிறகு விவாதம் இருக்காது என பேரவைத் தலைவர் ஜேசிடி பிரபாகர் தெரிவித்துள்ளார்.சட்டப்பேரவை நேரலை... சாதகமா... பாதகமா...?No debate in the Legislative Assembly today, says Speaker JCD Prabhakar