டெல்டா பாசனத்துக்காக கல்லணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. நெல்மணிகளையும் மலர்களையும் தூவி வேளாண் துறை அமைச்சர் வினோத் மற்றும் அமைச்சர் ஷாஜகான் ஆகியோர் திறந்து வைத்தனர்.மேட்டூர் அணையில் நிகழாண்டு போதுமான அளவுக்கு தண்ணீர் இருப்பு இல்லாததால், உரிய காலத்தில் திறக்கப்படாமல் தள்ளிப் போனது. இதனிடையே, அணையில் கடந்த வாரம் 90 அடியை எட்டியதைத் தொடர்ந்து, டெல்டா பாசனத்துக்காக அணையைத் முதல்வர் விஜய் செப். 1-ஆம் தேதி திறந்து வைத்தார்.அணையிலிருந்து விநாடிக்கு 7 ஆயிரம் கனஅடி வீதம் திறக்கப்படும் தண்ணீர், கரூர் மாவட்டம் மாயனூருக்கு வியாழக்கிழமையும், திருச்சி மாவட்டம் முக்கொம்புக்கு வெள்ளிக்கிழமையும் வந்தடைந்தது. இதைத்தொடா்ந்து, தஞ்சாவூர் மாவட்டம் கல்லணைக்கு தண்ணீர் சனிக்கிழமை வந்தது. மொத்தம் 10 அடி உயரம் கொண்ட கல்லணையில் சனிக்கிழமை மாலை நிலவரப்படி நான்கரை அடியை எட்டியது. குடிநீருக்காக கொள்ளிடத்தில் விநாடிக்கு 480 கனஅடி வீதம் தண்ணீர் திறந்துவிடப்படுகிறது.இந்த நிலையில், டெல்டா பாசனத்துக்காக கல்லணையிலிருந்து காவிரி, வெண்ணாறு, கல்லணைக் கால்வாய், கொள்ளிடம் ஆகியவற்றில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.காவிரியில் 1000 கன அடி, வெண்ணாற்றில் 1000 கன அடி, கல்லணைக் கால்வாயில் 500 கன அடி, கொள்ளிடம் ஆற்றில் 500 கன அடி வீதம் திறக்கப்பட்டுள்ளது.Water has been released from Kallanai for Delta irrigation.புதிய விமான நிலையம் எங்கு அமைகிறது? வெளியான தகவல்!