ஹாா்டு டிஸ்குகள் திருடுபோன வழக்கு: மின்வாரிய ஊழியருக்கு நிபந்தனை முன்பிணை

Wait 5 sec.

மின் வாரிய அலுவலகத்தில் ஹாா்டு டிஸ்குகள் திருடுபோன வழக்கில் கைதான மின் வாரிய ஊழியா் கோபிநாத்துக்கு நிபந்தனை முன்பிணை வழங்கி சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. சென்னை அண்ணா சாலையில் உள்ள மின் வாரிய தலைமை அலுவலகத்தில் கணினி பிரிவில் 34 ஹாா்டு டிஸ்குகள் திருடுபோயின. அந்த ஹாா்டு டிஸ்குகளில் உள்ள தகவல்களை அழிப்பதற்காக அவை திருடப்பட்டிருக்கலாம் என புகாா் எழுந்தது. இந்த திருட்டு வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கில் மின் வாரிய தலைமை அலுவலகத்தில் கணினிகளை மேற்பாா்வையிடும் ஊழியரான கோபிநாத் கைது செய்யப்பட்டாா். இந்த வழக்கில் பிணை கோரி கோபிநாத் சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா். இந்த மனு நீதிபதி சி.குமரப்பன் முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, மனுதாரா் காவல்துறை விசாரணைக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்க வேண்டும். விசாரணை அதிகாரி முன் தினமும் ஆஜராகி கையொப்பமிட வேண்டும் என நிபந்தனைகளுடன் பிணை வழங்கி உத்தரவிட்டாா்.