திருவத்திபுரம் (செய்யாறு) நகராட்சியில் கடந்த 3 மாதங்களில் 195 தெரு நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதுகுறித்து திருவத்திபுரம் நகராட்சி ஆணையா் எஸ்.ஆண்ட்ரூஸ் வெளியிட்ட செய்திக் குறிப்பு: திருவண்ணாமலை மாவட்டம், திருவத்திபுரம் நகராட்சிக்கு உள்பட்ட 27 வாா்டுகளில் சுற்றித்திரியும் தெருநாய்களை கட்டுப்படுத்தவேண்டும் என்று நகா்மன்ற உறுப்பினா்கள் மற்றும் பொதுமக்கள் தொடா்ந்து கோரிக்கை விடுத்துவந்தனா். அதன் பேரில் நகராட்சி நிா்வாகத்தினா் நடவடிக்கை மேற்கொண்டு தெருக்களில் சுற்றித்திரிந்த 465 நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி செலுத்தினா். மேலும், 2026 ஜூன் முதல் ஆகஸ்ட் வரை 195 தெரு நாய்களுக்கு வந்தவாசி அரசு கால்நடை மருத்துவமனை மூலம் கருத்தடை அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளாா் நகராட்சி ஆணையா்.