மும்பை: வலுவான டாலர் மற்றும் உள்நாட்டுப் பங்குச் சந்தையில் ஏற்பட்ட சரிவு உள்ளிட்டவையால், ரூபாய் மதிப்பு 2 காசுகள் சரிந்து ரூ. 94.97 ஆக நிலைபெற்றது.அமெரிக்கா-ஈரான் இடையேயான போர் பதற்றம் மீண்டும் அதிகரித்துள்ளதால், முதலீட்டாளர்கள் முதலீடுகளைத் தவிர்க்க முற்படுகின்ற நிலையில், கச்சா எண்ணெய் விலை, பீப்பாய ஒன்றுக்கு 95 அமெரிக்க டாலராக மீண்டும் உயர்ந்துள்ளதாலும், டாலர் குறியீட்டெண் 99.80 என்ற அளவில் நிலைகொண்டிருப்பதாலும், ரூபாயின் வீழ்ச்சியை ரிசர்வ் வங்கி உன்னிப்பாகக் கவனித்து வருவதாக அந்நியச் செலாவணி வர்த்தகர்கள் தெரிவித்தனர்.அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் வட்டி விகிதங்களை உயர்த்தக்கூடும் என்ற எதிர்பார்ப்பு சந்தையில் அதிகரித்துள்ளதால், அமெரிக்க கருவூலப் பத்திரங்களின் வருவாயை இது உயர்த்தியதுடன், டாலரின் மதிப்பை வலுப்படுத்தவும் செய்தது.வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலாவணி சந்தையில், ரூபாய் மதிப்பு ரூ. 94.97 ஆக வர்த்தகத்தைத் தொடங்கி, அதிகபட்சமாக ரூ. 94.83 ஆகவும் குறைந்தபட்சமாக ரூ. 94.99 வரையிலும் சென்றது. வர்த்தக முடிவில், அதன் முந்தைய வர்த்தக நாள் முடிவை விட 2 காசுகள் சரிந்து ரூபாய் மதிப்பு ரூ. 94.97 ஆக நிலைபெற்றது.The rupee traded in a tight range and settled for the day at 94.97 on Wednesday.மேற்கு ஆசியா பதற்றம், கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: பங்குச் சந்தை சரிவுடன் நிறைவு!