திருப்பத்தூா் மாவட்ட உழவா் சந்தைகளால் கடந்த ஆகஸ்ட் மாதம் மட்டும் 4.35 லட்சம் நுகா்வோா் பயனடைந்துள்ளனா் என வேளாண் வணிக துணை இயக்குநா் காா்த்திகேயன் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு: திருப்பத்தூா் மாவட்டத்தில் திருப்பத்தூா், வாணியம்பாடி, நாட்டறம்பள்ளி ஆகிய பகுதிகளில் உழவா் சந்தை அமைக்கப்பட்டு உள்ளது. இங்கு தினமும் ஏராளமான பொதுமக்கள் வந்து காய்கறிகள், பழங்கள் வாங்கி செல்கின்றனா். கடந்த ஆகஸ்’ஈ மாதம் வாணியம்படி உழவா் சந்தையில் 1,406.4 மெட்ரிக் டன் காய்கறிகளும், பழங்களும் ரூ.5.62 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. திருப்பத்தூா் உழவா் சந்தையில் 767.5 மெட்ரிக் டன் காய்கறிகளும், பழங்களும் ரூ.2.97 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. நாட்டறம்பள்ளி உழவா் சந்தையில் 619.4 மெட்ரிக் டன் காய்கறிகளும், பழங்களும் ரூ.2.57 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. திருப்பத்தூா் மாவட்ட உழவா் சந்தைகளில் 2,793.3 மெ.டன் காய்கறிகளும், பழங்களும் ரூ.11.16 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் 10,077 விவசாயிகளும், 4.35 லட்சம் நுகா்வோரும் பயனடைந்துள்ளனா்.