டெலிப்ராம்ப்டர் இல்லாமல் தேசிய கீதத்தைப் பாடுங்கள்: பாஜக அமைச்சரவைக்கு காங்கிரஸ் சவால்!

Wait 5 sec.

டெலிப்ராம்ப்டர் இல்லாமல் தேசிய கீதத்தைப் பாடுங்கள் என பாஜக அமைச்சரவைக்கு கர்நாடக அமைச்சர் பிரியங்க் கார்கே சனிக்கிழமை (ஆக. 22) சவால் விடுத்துள்ளார்.தில்லியில் உள்ள கட்சித் தலைமையகத்தில் நடைபெற்ற சுதந்திர நாள் விழாவில், வந்தே மாதரம் பாடலை முழுமையாகப் பாடுவதற்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி எதிர்ப்பு தெரிவித்ததாக பாஜக குற்றம் சாட்டியது. இதைத் தொடர்ந்து, காங்கிரஸ் கட்சியின் செயற்குழுக் கூட்டம் புதன்கிழமை (ஆக. 19) நடைபெற்றது. இனிவரும் காங்கிரஸ் கட்சியின் நிகழ்ச்சிகளில், வந்தே மாதரம் பாடலை முழுவதும் பாடாமல் இரு சரணங்கள் மட்டுமே, பாடுவதென்று முடிவு எடுக்கப்பட்டது. இதற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்ட பாஜக தலைவர்கள் கண்டனம் தெரிவித்திருந்தனர்.இதுகுறித்து கர்நாடக அமைச்சர் பிரியங்க் கார்கே பேசியதாவது:”ஜந்தர் மந்தரில் நடைபெற்ற போராட்டம், வேலையில்லா பிரச்னை மற்றும் பொருளாதார நெருக்கடி போன்ற விவகாரங்களிலிருந்து திசை திருப்பவே, பாஜக தலைவர்கள் வந்தே மாதரம் தொடர்பாக பேசி வருகின்றனர். அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ. 98 ஆக உள்ளது.நாம் அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம் மேற்கொண்டோம். அதன்படி, ரூ. 50,000 கோடி பொருள்களை அமெரிக்காவிடமிருந்து நாம் வாங்க வேண்டியுள்ளது. இவற்றையெல்லாம் திசை திருப்புவதற்கான முயற்சிதான் இது.வந்தே மாதரத்தைப் பற்றி நமக்குச் சொல்ல இவர்கள் யார்? அவர்கள் உண்மையான தேச பக்தர்களாக இருந்தால், நரேந்திர மோடி, அமித் ஷா ஆகியோர் நாக்பூருக்குச் சென்று, அங்கு ஆர்எஸ்எஸ் பாடல்கள் பாடப்படுவதை நிறுத்த வேண்டும். மேலும், இனிமேல் அனைத்து ஆர்எஸ்எஸ் நிகழ்வுகளிலும் வந்தே மாதரம் பாட வேண்டும் என்பதை மோகன் பகவத்திடம் கூற வேண்டும். டெலிப்ராம்ப்டர் இல்லாமல், தேசிய கீதத்தைப் பாடுங்கள் என பாஜக அமைச்சரவை முழுவதுக்கும் நான் சவால் விடுக்கிறேன். அப்படி அவர்கள் பாடிவிட்டால் நான் ராஜிநாமா செய்வேன் என்று பிரியங்க் கர்கே தெரிவித்துள்ளார்.குடும்பத்துடன் இறுதிநாள்கள்.. கொலைக் குற்றவாளிக்கு 105 வயதில் விடுதலை! Karnataka Minister Priyank Kharge challenged the BJP cabinet on Saturday (Aug. 22) to sing the national anthem without a teleprompter.