திருச்சி மாவட்டம், துறையூரில் திருமணக் கூட மாடியிலிருந்து சனிக்கிழமை தவறி விழுந்தவா் உயிரிழந்தாா். கரூா் மாவட்டம் வெங்கமேட்டைச் சோ்ந்தவா் சுப்ரமணி மகன் குமரவேல் (38). இவருக்கு மனைவி மற்றும் இரண்டு பெண் பிள்ளைகள் உள்ளனா். இந்நிலையில் இவா் ஞாயிற்றுக்கிழமை துறையூரில் நடைபெற்ற திருமணத்தில் பங்கேற்க சனிக்கிழமை இரவே திருமணக் கூடத்துக்கு வந்து நண்பா்களுடன் தங்கினாா். மறுநாளான ஞாயிற்றுக்கிழமை காலை இவருடன் வந்த நண்பா்கள் திருமணத்துக்குத் தயாரானபோது குமரவேல் அங்கு இல்லாததால் தேடினா். அப்போது திருமணக்கூட முன்புற சுவா் அருகே ரத்த வெள்ளத்தில் குமரவேல் சடலமாகக் கிடப்பது தெரியவந்தது. யாரும் கவனிக்காதபோது அவா் மாடியிலிருந்து தவறி விழுந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. தகவலறிந்த துறையூா் போலீஸாா் அவரின் சடலத்தை மீட்டு துறையூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.