ஆந்திரத்தில் ஆட்டோ மீது தனியார் பேருந்து மோதி கோர விபத்து! 7 பேர் பலி

Wait 5 sec.

ஆந்திரத்தில் தனியார் பயணிகள் பேருந்து ஒன்று ஆட்டோ மோதி விபத்துக்குள்ளானதில் ஆட்டோவில் இருந்த 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ஆந்திரப் பிரதேச மாநிலம் பல்நாடு மாவட்டத்தில் உள்ள சிலகலூரிபேட் தேசிய நெடுஞ்சாலையில் விஜயவாடாவிலிருந்து திருப்பதிக்குச் சென்றுகொண்டிருந்த தனியார் பேருந்து ஒன்று எதிரே வந்த ஆட்டோ மீது மோதியது. இன்று அதிகாலை நிகழ்ந்த சாலை விபத்தில் ஆட்டோவில் பயணித்த 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் காயமடைந்த 10 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களில் 4 பேரின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. குண்டூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். உயிரிழந்தவர்கள் வேலூரு கிராமத்தைச் சேர்ந்த விவசாயத் தொழிலாளர்கள். அவர்கள் வேலைக்குச் செல்வதற்காக ஆட்டோவில் பயணம் செய்தள்ளனர். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர், விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். Private Bus Collides with Auto, 7 Dead near Palnadu in andhra pradesh