பல்லடம் அருகேயுள்ள கோடங்கிபாளையம் எம்.ஜி.ஆா். நகருக்கு பேருந்து வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. பல்லடம் ஒன்றியம், கோடங்கிபாளையம் ஊராட்சிக்கு உள்பட்ட எம்.ஜி.ஆா். நகரில் 100-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதியில் வசிப்போருக்கு பேருந்து வசதி இல்லாததால் சிரமப்பட்டு வந்தனா். பேருந்துக்காக பொதுமக்கள், பள்ளி மாணவா்கள் சுமாா் 2 கிலோ மீட்டா் தொலைவுக்கு நடந்து செல்ல வேண்டிய நிலை இருந்தது. இதையடுத்து கோடங்கிபாளையம்- உக்கடம் வழித்தடத்தில் இயக்கப்படும் 105 சி பேருந்தை எம். ஜி.ஆா். நகா் வழியாக இயக்க வேண்டும் என்றுபல்லடம் சட்டப் பேரவை உறுப்பினா் கே.ராம்குமாரிடம் இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனா். இதை ஏற்று அவரது முயற்சியால் புதிய வழித்தடத்தில் பேருந்து இயக்கம் அண்மையில் தொடங்கியுள்ளது.