பஹல்காம் தாக்குதல்: பயங்கரவாதி சயீத்துக்கு எதிராக என்ஐஏ அழைப்பாணை

Wait 5 sec.

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் மூளையாகச் செயல்பட்டதாக பயங்கரவாதி ஹஃபீஸ் சயீத்துக்கு எதிராக தேசிய புலனாய்வு முகமை அழைப்பாணை விடுத்துள்ளது.ஜம்மு - காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் 2025 ஏப்ரல் 22 ஆம் தேதியில் பாகிஸ்தான் பயஙகரவாதிகள் நடத்திய திடீர் தாக்குதலில் 26 பேர் பலியாகினர். இந்தத் தாக்குதலுக்கு பாகிஸ்தானை சேர்ந்த லஷ்கர்-இ -தொய்பா பயங்கரவாத அமைப்பின் துணை அமைப்பான, தி ரெசிஸ்டென்ஸ் பிரண்ட் பொறுப்பேற்றது. இதனிடையே, இந்திய ராணுவம், ஆபரேசன் சிந்தூர் நடவடிக்கை மேற்கொண்டு, பாகிஸ்தான் பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியது.இதனைத் தொடர்ந்து, பஹல்காம் தாக்குதல் தொடர்பாக டிச. 15-ல் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டு, அதில் பாகிஸ்தான் ஆப்கானிஸ்தானை சேர்ந்த 7 பேரின் பெயர்கள் இடம்பெற்றன. மேலும், இந்தத் தாக்குதல் சம்பவத்துக்கு மூளையாக செயல்பட்டதாக லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பின் தலைவர் ஹஃபீஸ் சயீத் மீது என்ஐஏ குற்றம் சாட்டி, அவருக்கு எதிராக பிணையில் வெளிவர முடியாத பிடிவாரண்டும் பிறப்பிக்கப்பட்டது.இந்த நிலையில், பாகிஸ்தானில் தஞ்சமாகியிருக்கும் ஹஃபீஸ் சயீத்துக்கு எதிராக இந்திய வெளியுறவு அமைச்சகம் அழைப்பாணை விடுத்துள்ளது. ஜம்முவில் உள்ள சிறப்பு என்ஐஏ நீதிமன்றத்தில் விசாரணைக்காக சயீத் ஆஜராக வேண்டும் என வெளியுறவு அமைச்சகம் அழைப்பாணை விடுத்துள்ளது.வங்காள விரிகுடாவில் 22 பேருடன் மூழ்கிய சரக்கு கப்பல்: தேடுதல் பணி தீவிரம்NIA summons Sayeed Ibrahim for allegedly masterminding the Pahalgam terror attack case