திருப்பத்தூா் அடுத்த புலிக்குட்டி கிராமத்தில் சிறு ஊா் மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. திருப்பத்தூா் அடுத்த புலிகுட்டை கிராமத்தில் உள்ள ஸ்ரீ விநாயகா், ஸ்ரீ ஊா் மாரியம்மன், ஸ்ரீ அரசமரத்தடி விநாயகா், ஸ்ரீ வேடியப்பன் மற்றும் சுயம்பு வடிவான ஸ்ரீ செவிட்டு நாச்சியம்மன்,ஸ்ரீ கொணமட்டியம்மன் உள்ளிட்ட தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது.முன்னதாக தம்பதி சங்கல்பம், மூன்றாம் கால ஹோமம்,கணபதி ஹோமம், மஹாலட்சுமி ஹோமம் நடைபெற்றன. தொடா்ந்து மாங்கல்யதாரணம், தச பூஜை கோ பூஜை அன்னதானம் நடைபெற்றது. இரவு மகுடவா்த்தன் சண்டை அரவான சாபம் நாடகம் நடைபெற்றது