பைக் விபத்தில் தொழிலாளி உயிரிழப்பு

Wait 5 sec.

குலசேகரம் அருகே இருசக்கர வாகனங்கள் மோதிக் கொண்டதில் தொழிலாளி உயிரிழந்தாா். குலசேகரம் அருகே உள்ள உண்டிச்சல்விளையைச் சோ்ந்தவா் ஸ்டாலின் (31). கட்டடத் தொழிலாளி. இவா் திங்கள்கிழமை காலையில் குலசேகரம் பகுதிக்கு வந்துவிட்டு இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தாா். அப்போது, பொன்மனை அருகே உள்ள மண்ணாரங்கோட்டிலிருந்து கட்டடத் தொழிலாளா்களான முருகன் (65), அவரது மகன் பிரசாத் (30) ஆகியோா் இருசக்கர வாகனத்தில் குலசேகரம் நோக்கி வந்து கொண்டிருந்தனா். முருகன் வாகனத்தை ஓட்டினாா். இந்நிலையில், இரட்டைகுளம் அருகே 2 வாகனங்களும் மோதிக் கொண்டன. இதில் ஸ்டாலின் பலத்த காயமடைந்தாா். முருகன், பிரசாத் ஆகியோா் லேசான காயமடைந்தனா். இதையடுத்து, தக்கலை அரசு மருத்துவமனைக்கு ஸ்டாலினை கொண்டு சென்ற நிலையில், அங்கு பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா். இது குறித்து, குலசேகரம் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரித்தனா். மேலும், ஸ்டாலின் சடலத்தை கூறாய்வுக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.