தாய்லாந்திலிருந்து விமானம் மூலம் சென்னைக்கு கடத்தி வரப்பட்ட ரூ.14.5 கோடி மதிப்பிலான 14.5 கிலோ உயர்ரக ஹைட்ரோபோனிக் கஞ்சாவை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா். தாய்லாந்து தலைநகா் பாங்காக்கில் இருந்து சென்னைக்கு விமானத்தில் வந்தவா்களை சுங்கத்துறை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்தனா். அப்போது, சுமாா் 35 வயதுடைய பெண் பயணி ஒருவா் மீது சந்தேகம் ஏற்பட்டதையடுத்து, அவரிடம் விசாரணை நடத்தி சோதனை செய்தனா். அவரது உடைமைகளில் இருந்த பதப்படுத்தப்பட்ட தாய்லாந்து உணவுப் பொருள் பாக்கெட்டுகளை பிரித்து சோதனை செய்தபோது, அவற்றுக்குள் உயர்ரக ஹைட்ரோபோனிக் கஞ்சா மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.இதையடுத்து ரூ.14.5 கோடி மதிப்பிலான 14.5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த அதிகாரிகள், பெண் பயணியை கைது செய்தனா். விசாரணையில், அவா் சா்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பலுக்காக கடத்தல் நபராக செயல்பட்டு வந்ததும், இதற்கு முன்பும் போதைப்பொருளை சென்னைக்கு கடத்தி வந்திருப்பதும் தெரியவந்ததாகக் கூறப்படுகிறது.சென்னையில் இந்த போதைப்பொருளை யாரிடம் ஒப்படைக்க அவா் வந்தாா் என்பது குறித்து சுங்கத்துறை அதிகாரிகள் தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.