பாகிஸ்தான் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 15 பச்சிளம் குழந்தைகள் புதன்கிழமை பலியாகின.இஸ்லாமாபாத்தில் இயங்கி வரும் பாகிஸ்தான் மருத்துவ அறிவியல் நிறுவனத்தின் மகப்பேறு மற்றும் மகளிர் மருத்துவப் பிரிவில் புதன்கிழமை காலை 7 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.இந்த சம்பவத்தின் போது அந்த பிரிவில் 16 பச்சிளம் குழந்தைகள் இருந்த நிலையில், ஒரு குழந்தையை மட்டுமே காப்பாற்ற முடிந்ததாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.தகவலறிந்து மருத்துவமனைக்கு விரைந்த தீயணைப்பு மற்றும் மீட்புக் குழுவினர், உள்ளே இருந்த மற்ற நோயாளிகள் மற்றும் மக்களை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.மகப்பேறு மற்றும் மகளிர் மருத்துவப் பிரிவில் இருந்த ஏர்-கண்டிஷனரின் கம்ப்ரஸர் வெடித்ததில் இந்த தீ விபத்து ஏற்பட்டதாக மீட்புக் குழுவினர் முதல்கட்ட செய்திகளை வெளியிட்டுள்ளனர்.பாகிஸ்தான் மருத்துவ அறிவியல் நிறுவனம், இஸ்லாமாத்தின் மிகப்பெரிய மருத்துவமனை என்பது குறிப்பிடத்தக்கது.Fire at Pakistan's largest hospital! 15 newborns dead!மோகன் பாகவத்தின் நியூயார்க் நிகழ்வுக்கு மேயர் மம்தானி எதிர்ப்பு!