கூடலூரில் மனிதர்களை வேட்டையாடும் ஆள்கொல்லி புலியைப் பிடிக்க வனத் துறை தீவிரம்!

Wait 5 sec.

உதகை: கூடலூா் அருகே மனிதர்களை வேட்டையாடும் ஆள்கொல்லி புலியைப் பிடிக்கும் பணியில் தமிழக வனத் துறையினா் தீவிரமாக ஈடுபட்டுள்ளனா் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.நீலகிரி மாவட்டம், கூடலூா் அருகே உள்ள ஓவேலி பகுதியில் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு விவசாயி பாலசுப்பிரமணி என்பவரும், கடந்த வெள்ளிக்கிழமை விவசாயி ரவிச்சந்திரன் என்பவரும் அடுத்தடுத்து புலி தாக்கி உயிரிழந்தனா். இந்த சம்பவம் கூடலூா் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள பொதுமக்களை மிகவும் அச்சமடையச் செய்துள்ளது.இந்த நிலையில், தமிழ்நாடு வனத் துறை புலியைப் பிடிக்க உத்தரவிட்டுள்ளதால் புலி நடமாட்டம் காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ள ஒவேலி வனப்பகுதியை ஒட்டிய பகுதிகளில் தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி, 80-க்கும் மேற்பட்ட வனத்துறையினர் இரண்டு சிறப்புக் குழுக்களாக பிரிக்கப்பட்டு புலியை தேடும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அந்த புலியைக் கண்காணிக்கவும் பிடிக்கவும் தானியங்கி கேமராக்கள், மூன்று 'தெர்மல் ட்ரோன்' கருவிகளைப் பயன்படுத்தியும், முக்கிய இடங்களில் ஆறு கூண்டுகளை அமைத்தும், வனப்பகுதி முழுவதும் 50 கேமராக்களைப் பொருத்தி புலியின் கால்தடங்களை அடையாளம் கண்டு நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனா். தேவைப்படும்பட்சத்தில் புலிக்கு மயக்க ஊசி செலுத்தி பிடிக்கவும் கால்நடை மருத்துவக் குழு தயாா் நிலையில் உள்ளது.புலி பிடிபடும் வரை பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறும், இரவு நேரங்களிலோ அல்லது அதிகாலை வேளைகளிலோ வீட்டை விட்டு வெளியே யாரும் தனியாக வனத்தை ஒட்டியுள்ள பகுதிகளுக்கும் செல்ல வேண்டாம் என கூடலூர் வன அலுவலர் தேவராஜ் ஞாயிற்றுக்கிழமை அறிவுறுத்தியுள்ளார். ஒவேலி பகுதியில் புலியைப் பிடிக்க கூண்டு வைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள வனத் துறையினா். The Tamil Nadu Forest Department has intensified efforts to capture a suspected man-eating tiger that killed two people in the Nilgiris district this month, an official saidதகாத வார்த்தைகளைப் பயன்படுத்தும் முன்னாள் அமைச்சர்கள்- அமைச்சர் ரமேஷ்