மாற்றப்படும் விதிகள்! காமன் மேன் நிகழ்ச்சியில் இருந்து பிக் பாஸுக்கு செல்லும் 3 பேர்!

Wait 5 sec.

பிக் பாஸ் காமன் மேன் நிகழ்ச்சியில் இருந்து, பிக் பாஸ் 10 சீசன் நிகழ்ச்சிக்கு 3 பேர் பங்கேற்கவுள்ளனர்.விஜய் தொலைக்காட்சியில் ஆண்டுதோறும் பிக் பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கும் பிரபலங்கள் வெளி உலகத் தொடர்பின்றி 100 நாள்கள் இருக்க வேண்டும், இடையிடையே நடக்கும் போட்டிகளிலும் வெற்றிப் பெற வேண்டும்.வார வாரம் நடக்கும் எலிமினேஷனில்(வெளியேற்றம்) மக்கள் மனங்களைக் கவர்ந்த போட்டியாளர் நிகழ்ச்சியில் நீடிப்பார். குறைந்த வாக்குகளைப் பெற்றவர்கள் ஒவ்வொரு வாரமும் வெளியேற்றப்படுவார்.விளையாட்டுப் போட்டிகள் மட்டுமல்லாமல் மனரீதியாக நடத்தப்படும் போட்டிகளிலும் பங்கேற்று வெற்றிப் பெற வேண்டும்.இம்முறை பொதுமக்கள் (பிக் பாஸ் காமன் மேன்) பங்கேற்கும் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. இதில், வெற்றி பெறுபவர்கள், பிக் பாஸ் நிகழ்ச்சியின் 10வது சீசனில் நேரடியாக 3 பேர் பங்கேற்கவுள்ளனர்.பிக் பாஸ் - காமன் மேன் நிகழ்ச்சி ஆக. 16 ஆம் தேதி முதல் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 10 மணிக்கும், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மாலை 5.30 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது.இந்த நிகழ்ச்சியை பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற முன்னாள் போட்டியாளர் மாயா கிருஷ்ணன் தொகுத்து வழங்குகிறார். அதேபோல, முன்னாள் போட்டியாளர்கள் ஓவியா, ராஜு, ஆரி ஆகியோர் நடுவர்களாகப் பங்கேற்கின்றனர்.பிக் பாஸ் நிகழ்ச்சியின் 10வது சீசனின் சில விதிகள் மாற்றப்பட்டு, வரும் செப்டம்பர் 6 ஆம் தேதி தொடங்கவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.Three individuals from the 'Bigg Boss Common Man' show are set to participate in Season 10 of Bigg Boss.தனி நபருக்கு கூடிய கூட்டம்! வரலாறு படைத்த பிக் பாஸ் மாயாவின் நாடகம்!