ஆசிரியர் தகுதித் தேர்வில் (டெட்) இருந்து விலக்களிக்கக் கோரி சட்டப்பேரவையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தனித் தீர்மானம் கொண்டு வந்தார். உச்சநீதிமன்ற உத்தரவால் 2010-க்கு முன் பணியில் சேர்ந்த ஆசிரியர்களும் டெட் தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம் ஆகியுள்ளதால், அவர்களுக்கு டெட் தேர்விலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தி பேரவையில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் தனித் தீர்மானம் கொண்டு வந்தார்.சட்டப்பேரவையில் இதுதொடர்பான தனித் தீர்மானத்தைக் கொண்டுவந்து பேசிய அவர், "2010 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 23 - க்கு முன்பாக நியமனம் செய்யப்பட்ட ஆசியர்களுக்கு டெட் தேர்வில் இருந்து முழுமையான விலக்கு வேண்டும். இதற்கு மத்திய அரசு கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தில் உரிய திருத்தம் மேற்கொள்ள வேண்டும். ஆசிரியர் தகுதித் தேர்வில் இருந்து முழுமையான மற்றும் நிரந்தர விலக்கு அளிப்பதற்கு உரிய நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்ள பேரவை ஒருமனதாக வலியுறுத்துகிறது" என்று கூறினார். Minister Rajmohan moves a special resolution seeking exemption from the TET exam